Show all

வென்றது தமிழ்த் தலைவர்கள் அணி! பிரபலமாகி வரும் புரோ கபடி தொடர் விளையாட்டின், 2ஆவது நாள் ஆட்டத்தில், தெலுங்கு டைட்டன்சை

மிகப்பெரிய கிரிக்கெட் தொடரான உலகக் கோப்பை தொடர் முடிந்த நிலையில், இந்தியாவில் கிரிக்ட்கெடை தொடர்ந்து பிரபலமாகி வரும் புரோ கபடி தொடர் தொடங்கி உள்ளது. நேற்றைய 2 ஆவது நாள் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியைத் தமிழ்த் தலைவர்கள் வென்றது.

06,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தாண்டு புரோ கபடி தொடர் விளையாட்டில், தமிழ்த்; தலைவர்கள்;, அரியானா ஸ்டீலர்ஸ், தபாங் டெல்லி, ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூர் புல்ஸ், தெலுங்கு டைடன்ஸ், குஜராத் பார்ச்சூர் ஜெயன்ட்ஸ், உபி யோதா, பாட்னா பைரேட்ஸ், யு மும்பா, புனேரி பல்தான் என 12 அணிகள் மோதுகின்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற 11அணிகளுடன் தலா 2 போட்டியில் மோதும்.

கூட்டிணைவு சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்கு முன்னேறும். 

7-வது புரோ கபடி கூட்டிணைவு போட்டி தொடர் ஐதராபாத்தில் முந்தா நாள் தொடங்கியது. முதலாவது ஆட்டத்தில் முன்னாள் வாகையர் மும்பை அணி, தெலுங்கு டைட்டன்சை சந்தித்தது. மும்பை அணி 31-25 என்ற புள்ளி கணக்கில் உள்ளூர் அணியான தெலுங்கு டைட்டன்சை வென்றது. 

இரண்டாவது நாளான நேற்று நடந்த 2வது போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் - தமிழ்த்; தலைவர்கள் அணிகள் மோதின. 39-24 என்ற புள்ளி கணக்கில் தமிழ்த் தலைவர்கள் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,221.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.