Show all

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியேறும் நபர் மோகன் வைத்தியா! கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பிக் பாஸ் வீட்டில் மோகன் வைத்யா பார்வையாளர்களால் அதிகம் வெறுக்கப் படும் நபராக உள்ளார். இவரைக் கலாய்த்து பல கருத்துப் படங்கள் கூட சமூக வலைதளத்தில் வந்த வண்ணம் இருந்தன. மேலும், பல்வேறு இணையதளத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மோகன் வைத்யாவிற்கு தான் குறைந்த வாக்குகள் கிடைத்துள்ளன. எனவே, இந்த கிழமை மோகன் வைத்யா வெளியேற்றப்படவுள்ளார். 

05,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது கிழமைக்கான வெளியேற்றம் நெருங்கியுள்ளது. வெளியேற்றப் படலத்தில் தேர்வானவர்கள் அபிராமி, சேரன், மீரா மிதுன், மோகன் வைத்யா, சரவணன் ஆகியோர். 

இவர்களில் யாரை வெளியேற்ற வேண்டாம் என்கிற பிக்பாஸ் வாக்களிப்பும், கருத்துக் கணிப்புகள் வாக்கெடுப்புகளும் நேற்று இரவு 12 மணிக்கு நிறைவடைந்தன. அதில் மோகன் வைத்யா மிக குறைவான வாக்குகள் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 
முதல் கிழமையில் அதிகம் வெறுக்கப்ட்ட அபிராமி இந்தக் கிழமை அதிக வாக்குகளை பெற்று பாதுகாப்பில் முதலிடத்தில் உள்ளார். 

இந்த கிழமை மீரா மற்றும் மோகன் வைத்யா இருவருக்கும் நெருக்கமான வாக்குகள் கிடைத்துள்ளது. இதில் இறுதியில் மோகன் வைத்யா குறைவான வாக்குகள் பெற்றுள்ளார். வெளியேற்றப் பட்டியலில் உள்ள ஐவரில், பிக் பாஸ் வீட்டில் மோகன் வைத்யா பார்வையாளர்களால் அதிகம் வெறுக்கப் படும் நபராக உள்ளார். இவரைக் கலாய்த்து பல கருத்துப் படங்கள் கூட சமூக வலைதளத்தில் வந்த வண்ணம் இருந்தன. மேலும், பல்வேறு இணையதளத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மோகன் வைத்யாவிற்கு தான் குறைந்த வாக்குகள் கிடைத்துள்ளன. எனவே, இந்தக் கிழமை  மோகன் வைத்யா வெளியேற்றப்படவுள்ளார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,220.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.