காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள 18 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என அதிமுக பாராளுமன்ற மேலவை உறுப்பினர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். தினகரன் ஆதரவு 18 சட்டமன்ற உறுப்பினர்களை பேரவைத்தலைவர் தனபால் இன்று தகுதி நீக்கம் செய்தார். இதையடுத்து 18 தொகுதிகளும் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டது. அத்துடன் தமிழக அரசின் அரசிதழிலும் 18 தொகுதிகளும் காலி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பாராளுமன்ற மேலவை உறுப்பினர் வைத்திலிங்கம், ‘கட்சிக்கு துரோகம் செய்ததாலும், திமுகவுடன் தொடர்பு வைத்ததாலும் 18 பேரும் நீக்கப்பட்டுள்ளனர். இந்த 18 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத் தேர்தல் வரும் என்றார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.