Show all

தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கத்தை எதிர்த்து மனு

தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் உத்தரவிட்டு உள்ளார்.

தகுதி நீக்கத்தை தடுத்து நிறுத்த தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் உயர்அறங்கூற்று மன்றத்தில் முறையீட்டனர். இது குறித்த கோரிக்கையை மனுவாக பதிகை செய்ய உயர்அறங்கூற்று மன்றம் அறிவுரை வழங்கி உள்ளது.

இதை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவரின் இந்த உத்தரவை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் இன்று மனு பதிகை செய்துள்ளனர். முன்னரே தி.மு.க தொடர்ந்த வழக்கில் இந்த மனுவும் இணைப்பு மனுவாக இணைக்கப்பட்டுள்ளது. இம்மனு மீதான விசாரணை சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் வரும் 20 அன்று நடைபெறுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.