Show all

மத்திய குழு நாளை தமிழகம் வருகை! கஜா புயல் பாதிப்புகளைப் பார்வையிடும் பொருட்டு

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று இன்று தலைமைஅமைச்சர் மோடியிடம் நேரில் தெரிவித்தார்.

அந்த சமயத்தில் கஜா புயல் பாதிப்புகள் குறித்து தலைமை அமைச்சரிடம்; எடுத்துக் கூறினார். புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய  மத்திய குழுவை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.  அவருக்கு பதிலளித்த தலைமை அமைச்சரும்  மத்திய ஆய்வு குழுவை அனுப்புவதாக உறுதி அளித்து இருந்தார்.

இந்நிலையில், கஜா புயலால் ஏற்பட்ட சேத பகுதிகளைப் பார்வையிட மத்திய குழு நாளை வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய  பேரிடர் மேலாண்மை இயக்குனர் தலைமையில்  4 பேர் கொண்ட குழு நாளை தமிழகம் வருகிறது. முதல் அமைச்சருடன் ஆலோசனை நடத்தும் இந்த  குழு பின்னர் புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வுகளில் ஈடுபடுகிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்  வெளியாகிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,979.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.