Show all

தேர்தல் ஆணையம் தி.மு.க.வினரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதாக ஸ்டாலின் புகா

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரத்தில் நேற்று (18.07.2015) தி.மு.க.வின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், 17 மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தி.மு.க.வினர் பங்கேற்றனர். பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தி.மு.க. பொருளாளர் திரு.ஸ்டாலின், சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்குகள் விலைக்கு வாங்கப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

இதுகுறித்த பல்வேறு புகார்கள் ஊடகங்களில் வெளியான போதும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், ஆயிரக்கணக்கான தி.மு.க.வினரின் பெயர்களை திட்டமிட்டே வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.