Show all

சன் குழுமத்திற்கு அடுத்த கட்ட அதிர்ச்சி

மூன்று நாட்களுக்குத் தடை சன்தொலைக்காட்சி சொத்துக்களை முடக்க. ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கு. சட்ட விரோத தொலைப்பேசி இணைப்பக வழக்கு. பணப்பரிவர்த்தனை வழக்கு என்று பல வழக்குகளைச் சன் தொலைக்காட்சி சந்தித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு சன் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு சன் தொலைக்காட்சியின் 742கோடி சொத்து முடக்கத்திற்கான அறிவிப்பு அனுப்பியிருந்தது. இதனை எதிர்த்து சன்தொலைக்காட்சி நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரந்தது. இந்த வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதி மன்றம் உச்ச நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியது. சன்தொலைக்காட்சி அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு தடைகேட்டு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

உச்ச நீதிமன்றம் இந்த வழக்கின் 13/07/2015 விசாரணைக்கு உத்தரவிட்டு அன்றுவரை சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் மீதான அமலாக்கப்பிரிவின் 742கோடி சொத்து முடக்க முயற்சிக்கு தடை விதித்தது. சன்தொலைக்காட்சி நிறுவனத்தின் மீதான அமலாக்கத்துறையின் 742கோடி சொத்து முடக்க முயற்சிக்கு உச்சநீதி மன்றத்தின் மூன்று நாள் தடை கிடைத்தது. இவ்வாறான சூழலில் இந்தியாவின் பண்பலை வானொலிகளுக்கான மூன்றாம் கட்ட ஏலத்தில் கலந்து கொள்ள சன்குழுமத்தின் மனுஏற்க படாத அடுத்தக்கட்ட அதிர்ச்சியில் சன்குழுமம் உறைந்து போயிருக்கிறது. தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாமக, மதிமுக, திமுக கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. கருணாநிதி, உள்துறை அமைச்சகம் சன்குழுமத்திற்கு பாதுகாப்புச் சான்றிதழ் வழங்காமல் இதற்கு காரணமாகி இருக்கிறது. நடுவண் அரசு மக்களாட்சிக்கு எதிரான இந்த போக்கை மனுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.