Show all

செங்கோட்டையில் முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் உடல் தகனம்

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்றுமுன்தினம் காலை அவர் மரணம் அடைந்தார்.அவரது உடலுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா சார்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்றுமுன்தினம் நள்ளிரவு உடல் கொண்டு வரப்பட்டது.நேற்று காலை அமைச்சர்கள், எம்.பி.க்கள், சமக தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

செங்கோட்டையில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பகல் 11.45 மணியளவில் அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் ஊர்வலமாக கற்குடியில் உள்ள தோப்பிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.