Show all

முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கார் விபத்திலிருந்து தப்பினார்

சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்து விமான நிலையத்திற்கு நேற்று காரில் சென்ற போது அவரின் காருக்கு பின்னால் பாதுகாப்பு வாகனம் சென்றது.கிண்டி ராஜ்பவன் அலுவலர் குடியிருப்பு சிக்னலில் சிதம்பரம் கார் நின்ற போது பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று பாதுகாப்பு வாகனம் மீது மோதியது. அதனால் பாதுகாப்பு வாகனம் சிதம்பரத்தின் கார் மீது மோதியது.

இந்த விபத்தில் காரில் இருந்த சிதம்பரம் காயம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினார். பாதுகாப்பு வாகனத்தில் வந்த மூன்று காவலர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்திய காரின் டிரைவர் பாலாஜி பலத்த காயமடைந்தார்.

அவர் குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதனிடையே காவல் துறையினர் அவரை விசாரித்து வருகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.