தமிழகத்தின் நிலைமை சற்று கவலை கொள்ளும் வகையில் அமைந்துள்ளது காரணம் தமிழகத்தின் எதிர்காலம் சீரழிவதை சில நாட்களாக வாட்ஸ்அப் வாயிலாக பரவிவரும் வீடியோ காட்சிகளால் பார்த்துவருகிறோம்.மதுவை கட்டுக்குள் வைக்கும் அரசே தமிழகம் முழுவதும் 6,823 டாஸ்மார்க் யை நிறுவி தமிழகத்தை கலங்கடித்துள்ளது.
கடந்த 23ம் தேதியன்று வெளியான வீடியோ வில் சிறுவனுக்கு அவரது தாய்மாமனே உற்றிகொடுத்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சியடைந்த மக்களுக்கு மேலும் ஒரு அதிர்சி மேலும் இது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.முன்னால் வீடியோ வெளியான நிலையில் போலீசார் அவர்களை திருவண்ணாமலை யில் கைது செய்துள்ளனர் .இந்த வீடியோவில் மதுரை தமிழ் பேசபடுவதால் அவர்களை போலீசார் மதுரை ஒட்டியுள்ள இடங்களில் தேடிவருகின்றனர் .மேலும் இவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.