Show all

திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைய வேண்டும் - கருணாநிதி

திட்டங்கள் எந்த ஆட்சியாக இருந்தாலும் அனைத்தும் மக்களை சென்றடைய வேண்டும் என தி.மு.க தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வந்ததற்காக கருணாநிதிக்குப் பாராட்டு விழா சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆலந்தூரில் 7-7-2015 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அவர் வராதா? வராதா? என்று ஆவலுடன் எதிர்பார்த்த மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது, திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டமாகும்.இந்தத் திட்டம் யார் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதை மக்களே அறிவர்.

என்னைப் பொருத்தவரையில், எந்த ஆட்சியில் ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டாலும், அந்தத் திட்டம் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதே எனது எண்ணம். திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் மக்களுக்காக நிறைவேற்றப்பட்டுள்ளன. எனினும், மக்கள் எங்களைச் சோதித்துள்ளனர். தற்போதைய அதிமுக ஆட்சியில் இருந்து மக்கள் தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும். அப்படி விடுவித்துக் கொள்வதுதான் உண்மையாக எனக்கு நன்றி தெரிவிப்பதாகும் என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.