Show all

மோடிக்கு அறைகூவலாக அமையப்போகிற தலைவர்! வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில்

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு, நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகிவருகின்றன. அனைத்துக் கட்சிகளும் வியூகம் வகுப்பதில் மும்முரமாக உள்ளன. இந்த நிலையில் மோடிக்கு அறைகூவலாக அமையப் போகிற தலைவர் யார் என்கிற தேடல் கருத்துக் கணிப்பின் மூலம் தொடங்கப்பட்டுள்ளது.
 
27,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், மோடிக்கு அறைகூவலாக அமையப்போகிற தலைவர் யார் என்பதற்கான கருத்துக்கணிப்பு ஒன்றை ஏபிபி செய்தி நிறுவனமும் சி-வோட்டர்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தியுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகிவருகின்றன. அனைத்துக் கட்சிகளும் வியூகம் வகுப்பதில் மும்முரமாக உள்ளன. 

காங்கிரஸ் கட்சி இழந்த மக்கள் செல்வாக்கை பெறுவதற்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்தியாவுடன் பயணம் என்கிற முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது. 
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் எதிர்க்கட்சி ஒற்றுமைக்காக கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து வருகிறார். 

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி எனப் பலரது பெயர்களும் தலைமைஅமைச்சர் வேட்பாளர் பெயர்களில் பரிமாறப்படுகின்றன. 

டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி, குஜராத் மற்றும் இமாச்சல சட்டமன்றத் தேர்தலுக்கும் தயாராகி வருகிறது. பாஜகவின் மிகப்பெரிய கோட்டையான குஜராத்திலும் அக்கட்சி சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத்தில் அக்கட்சியின் செயல்பாடு சிறப்பாக இருந்தால், கெஜ்ரிவாலின் செல்வாக்கு மேலும் அதிகரிக்கும் என அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். 

இரண்டாவது முறையாக டெல்லி முதல்வர் நாற்காலியில் அமர்ந்த பிறகு அரியானா, பஞ்சாப், இமாச்சல பிரதேசம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்தலில் போட்டியிட கெஜ்ரிவால் முடிவு செய்தார். ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி டெல்லிக்கு அடுத்தபடியாக பஞ்சாபில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நாட்டின் மனநிலையை புரிந்து கொள்ள, ஏபிபி நியூஸ், சி-வோட்டர்ஸ் இணைந்து ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது. இரண்;டு ஆண்டுகளில் வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தலைமைஅமைச்சர் வேட்பாளருக்கு மோடிக்கு யார் அறைகூவலாக இருப்பார் என்று கருத்துக்கணிப்பை நடத்தியது. 

அதில் மோடிக்கு கெஜ்ரிவால், நிதிஷ் குமார் இருவரில் யார் அறைகூவலாக இருப்பார் என்று கேட்கப்பட்டது. பெரும்பாலானோர் கெஜ்ரிவாலே மோடிக்கு அறைகூவலாக இருப்பார் என்று கூறி உள்ளனர். கெஜ்ரிவால் தான் மோடிக்கு கடும் அறைகூவலாக இருப்பார் என 63விழுக்காட்டினரும் நிதிஷ் குமார் அறைகூவலாக அறைகூவலாக இருப்பார் என 37விழுக்காட்டினரும் அந்த கருத்துக்கணிப்பில் தெரிவித்து உள்ளனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,369.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.