Show all

பாஜகவினரை அனுமதிக்க முடியாது- வாயிற்கதவுக்கு வெளியே நில்லுங்கள்! கேரள மக்கள் நடவடிக்கை

01,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரள மாநிலம் செங்கன்னூரில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் காஷ்மீர், உபியில், பலாத்கார சம்பவங்களுக்கு பாஜகவினர் காரணமாக இருந்ததாலும், குற்றவாளிகளுக்கு பாஜக பாதுகாப்பாய் இருந்ததாலும் அதிர்ச்சி அடைந்த கேரளாவின் அந்த தொகுதி மக்கள் பாஜகவுக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய கவனஅறிக்கையைக் கதவின் வெளியே மாட்டிவைத்துள்ளனர். 

ஒரே இரவில் அனைத்து வீடுகள் மற்றும் கட்டிடங்களில் தொங்கவிடப்பட்டுள்ள கவனஅறிக்கைகளில், இந்த வீட்டில் 10 அகவைக்குட்பட்ட சிறுமி இருக்கிறாள், வாக்கு கேட்க பாஜகவினரை அனுமதிக்க முடியாது; வாயிற்;கதவுக்கு வெளியே நில்லுங்கள் என்று எழுதப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,757.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.