Show all

பாராட்டு பெறும் தமிழ்மக்கள்! வியந்து நோக்கும் வட இந்திய இணைய ஆர்வலர்கள்.

02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒரு போராட்டத்தை எப்படி ஒற்றுமையாக நடந்த வேண்டும் என்பதை தமிழர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வட இந்திய மக்கள் இணையத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னையில் நடக்கும் டிஃபேஎக்ஸ்போ 2018 எனப்படும் ராணுவ மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்கில் கலந்து கொள்ள தலைமைஅமைச்சர் மோடி சென்னை வந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது.

தலைமைஅமைச்சர் மோடி சென்னை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த திரும்பிப் போ மோடி என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டிங்கில் முதல் இடம்பிடித்துள்ளது. 

தமிழர்களின் பலமும் ஒற்றுமையும் வியக்க வைக்கிறது. திரும்பிப் போ மோடியை பரப்பியதன் மூலம், தமிழர்கள் அவர்களின் ஒற்றுமையையும், அறிவையும் நிரூபித்துள்ளனர். அவர்களை வணங்குகிறேன் என்று இந்த வட இந்திய இணைய ஆர்வலர்கள்; கூறியுள்ளார்.

தமிழ்நாட்டு மக்களை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். மற்ற மாநில மக்களை விட அவர்கள் வித்தியாசமாக இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். என்று பதிவிட்டு இருக்கிறார்கள். இணைய ஆர்வலர்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,758.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.