Show all

வேதிவாயு கசிவு: ஏன்தான் ஆதித்யநாத்துக்கு பிரச்சனை மேல் பிரச்சனையோ

இன்று 24,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாம்லியில் உள்ள சர்க்கரை ஆலையில் இன்று காலை எரிகலனில் இருந்து வேதிவாயு கசிந்தது. இந்த வாயுக்கசிவால் ஆலைக்கு அருகில் உள்ள பள்ளியில் படிக்கும் சுமார் 300 மாணவ, மாணவியருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனே அழைத்துச் செல்லப்பட்டனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் பெரும்பாலான மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும், 36 மாணவர்கள் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏன்தான் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பிரச்சனை மேல் பிரச்சனையோ?

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.