Show all

காவல்துறையினர் கண்ணூர் பாஜக அலுவலகம் அருகே ஆயுதங்கள் கைப்பற்றினர்

இன்று 24,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கேரள மாநிலம் கண்ணூரில் பாஜக மாவட்ட அலுவலகம் அருகே இரண்டு நீண்ட வாள்கள், 7 இரும்புக் கம்பிகள், மற்றும் ஒரு கத்தி ஆகியவை கைப்பற்றப் பட்டுள்ளன.

பாஜக அலுவலகம் இயங்கும் வாடகை வீட்டுக் சுற்றுச்சுவர் அருகே மனை ஒன்றில் இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. கண்ணூர் மாநகராட்சிப் பணியாளர்கள் இந்த ஆயுதங்கள் இருப்பதை முதலில் கண்டு காவல் துறைக்குத் தகவல் அளித்துள்ளனர்.

மாவட்ட கமிட்டி அலுவலகத்தில் இத்தகைய ஆயுதங்களை வைத்திருக்க வேண்டிய தேவை பாஜகவுக்கு இல்லை என்றார் பி.சத்யபிரகாஷ்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.