Show all

கௌசல்யா இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக சொல்லப் படுகிற செய்தி என்ன!

23,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியராக இருப்பதை எவ்வாறு உணருகிறீர்கள் என்ற கேள்வியை முன்வைத்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பல தரப்பு மக்களிடம் பிபிசி கருத்து கேட்டு வெளியிட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கடந்த கிழமை பிபிசி தமிழுக்கு கௌசல்யா அளித்த பேட்டியில், 'அம்பேத்கர் இந்தியாவை யூனியனாகத்தான் கருதினார். அரசமைப்புச் சட்டத்திலும் அப்படிதான் சொல்லப்பட்டிருக்கிறது. தேச மொழி என்று ஒன்று இந்தியாவில் இல்லை. பண்பாட்டுத் தளத்திலும் மக்கள் பிரிந்துதான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டை ஒரு அடிமைப்படுத்தும் மாநிலமாகத்தான் இந்தியா நடத்திவருகிறது. ஸ்டெர்லைட், நியூட்ரினோ, மீத்தேன் திட்டங்களை தமிழ்நாட்டுக்கு எதிராகத்தான் முன்மொழிந்து செயல்படுத்துவதற்கான காரியங்களையும் செய்துகொண்டிருக்கிறார்கள்,' என்று கூறிய கௌசல்யா, மக்கள் இந்த திட்டங்களை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தினாலும், அரசு இந்த திட்டங்களை கைவிடவில்லை என்றும், உழவர்கள் டெல்லிக்கே சென்று போராடியிருந்தாலும் அவர்களது கோரிக்கைகளை செவிமடுத்துக் கேட்கவில்லை என்றும் கூறி அதனால், தாம் இந்தியாவை ஏற்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

காதல் திருமணம் செய்துகொண்ட கௌசல்யாவின் கணவர் சங்கர் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், கடந்த கௌசல்யாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களால் கொலை செய்யப்பட்டார். சங்கர் படுகொலைக்கு பிறகு, கௌசல்யா ஆணவக் கொலைகளுக்கு எதிராக பொது மேடைகளில் பேசிவருகிறார்.

ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்ட உடுமலைப்பேட்டை கௌசல்யா பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்த இந்தக் கருத்தைதான் இந்திய இறையாண்மைக்கு எதிரானதாக தெரிவித்து, அவரை கௌசல்யா எழுத்தராகப் பணிபுரிந்து வந்த வெல்லிங்டன் கண்டோன்மெண்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஹரிஷ் வர்மா நாள் குறிப்பிடாமல்  பணியிடை நீக்கம் செய்துள்ளதாக தெரிகிறது.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,054.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.