Show all

வாஸ்கோடகாமா - பாட்னா விரைவு தொடர்வண்டியின் 13 பெட்டிகள் தடம் புரண்ட அதிகாலை அவலம்

08,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கோவாவில் உள்ள வாஸ்கோடகாமா நகரில் இருந்து பீகார் தலைநகர் பாட்னாவுக்கு செல்லும் வாஸ்கோடகாமா-பாட்னா விரைவு தொடர்வண்டி இன்று அதிகாலை 4.18 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

பண்டா என்ற இடத்தில் தொடர்வண்டி சென்று கொண்டிருந்த போது தொடர்வண்டியின் 13 பெட்டிகள் தடம் புரண்டன. அதிகாலை ஏற்பட்ட இந்த விபத்தின் போது தூங்கி கொண்டு இருந்த மக்கள் கடும் பீதியில் உறைந்தனர்.

இந்த விபத்தில் 2 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்வண்டி தண்டவாளத்தில் ஏற்பட்ட சேதமே விபத்துக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,616

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.