Show all

ஈரான் அதிபரைக் கவர்ந்த, இந்தியாவின் பன்முகத்தன்மையில் ஒற்றுமை

05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்தியாவில் பண்பாட்டுப் பன்முகத் தன்மை கொண்ட பல்வேறு இனத்தினரும், ஒற்றுமையுடனும் அமைதியுடனும் வாழ்ந்து வருவதை ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி புகழ்ந்துள்ளார்.

ஈரான் அதிபர் ஹசன் ரூஹானியுடன் அந்நாட்டின் அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் 21பேர் இடம்பெற்ற குழுவினர் ஐதராபாத்துக்கு வந்துள்ளனர். அங்கு வாழும் ஈரானிய மக்களை அதிபர் ஹசன் ரூஹானி சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியாவில் பல்வேறு மதத்தினரும் இனத்தினரும் அவரவர் பண்பாட்டின்படி வழிபாடு நடத்தினாலும் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் வாழ்ந்து வருவதாக ஹசன் ரூஹானி தெரிவித்தார்.

போரால் சீர்குலைந்துள்ள ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக், ஏமன் ஆகிய நாடுகளில் வளர்ச்சிக்கான தடைகளை அகற்ற முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றும் ஹசன் ரூஹானி தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,701

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.