05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: வங்கியின் ரொம்ப முதன்மையான வாடிக்கையாளர்கள் நாட்டை சூறையாடிச் செல்கின்றனர் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரவித்தார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: வங்கிகளில் சிறு முதலீட்டாளர்கள், ஏழை விவசாயிகள், சுய உதவிக்குழுக்களுக்கு கடன் மறுக்கப்படுகிறது. பணக்காரர்கள் தங்கள் வாங்கிய வங்கி கடன்களைத் திருப்பி செலுத்துவதில்லை. சில ரொம்ப முதன்மையான வாடிக்கையாளர்கள் வங்கியை கொள்ளையடித்து, நாட்டையே சூறையாடி செல்கிறார்கள். இதனால் வேளாண்பெருமக்களும், சுய உதவிக்குழுக்களும் பாதிப்பை சந்திக்கிறார்கள். மக்களின் சேமிப்பு பாதுகாப்பாக இல்லை. பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி தொடர்பாக தீவிர விசாரணை வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,701
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.