Show all

சிங்கப்பூர் பயணம் புடம் போட்டதா! தமிழகத்தைக் கவனிக்கத் தொடங்கியிருக்கும் ராகுல்

06,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அமைந்துள்ள புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் பெரியார் சிலையொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திங்கள் இரவு யாரோ பெரியார் சிலையின் தலையை உடைத்து தனியாகத் துண்டித்துள்ளனர். மேலும் பெரியாரின் கையில் இருந்த தடியும் உடைக்கப்பட்டுள்ளது.

துண்டிக்கப்பட்ட சிலையின் தலைப் பகுதி அதே பகுதியில் வீசப்பட்டு கிடந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் காலை 8 மணிக்கு முன்னதாக உடைக்கப்பட்ட பெரியார் சிலையின் தலையை ஒட்ட வைத்தனர். இருந்த போதிலும் பதற்றத்தினைத் தணிக்க தொடர்ந்து அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தங்கள் சித்தாந்தங்களை எதிர்த்தவர்களின் சிலைகளை சேதப்படுத்துமாறு பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களைத் தூண்டுகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார். 

அண்மைக் காலமாக ராகுல் தமிழக அரசியலைக் கூர்ந்து கவனித்து வருகிறார். அதற்கு அவரை சிங்கப்பூர் அவரைப் புடம் போட்டு அனுப்பியிருக்கிறது.  

இது தொடர்பாக அவர் தனது கீச்சுப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது

திரிபுராவில் லெனின் சிலையை அகற்ற பாஜகவும் ஆர்.எஸ்.எஸும் ஊக்குவித்தது போல், தமிழகத்தில் பெரியார் போன்று  தங்கள் சித்தாந்தங்களை எதிர்த்தவர்களின் சிலைகளை சேதப்படுத்துமாறும் தங்கள் தொண்டர்களுக்கு பாஜகவால் கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.

மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதியும், தலித்களுக்காக போராடியவருமான பெரியாரின் சிலை இன்று தமிழகத்தில் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,732.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.