Show all

இப்படியெல்லாம் பெண்ணடிமைத்தனமா இந்தியாவில்! மணமகன் ஓட்டத்தால், மணமகன் அப்பாவை, திருமணத்திற்கு நிர்பந்தித்த பெண்ணின்தந்தை

23,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பீகார் மாநிலத்தின் சமஷ்டிபூரை சேர்ந்தவர் ரோஷன் லால் அகவை 65. இவரின் மகனுக்கும், சுவப்ணா அகவை 21 என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருமண சமயத்தில் தான் காதலித்து வந்த பெண்ணுடன் மணமகன் ஓடிப்போய்விட்டார்.
 
இதனால் திருமண வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தனது கவுரவம் கெட்டுவிடக்கூடாது என்று காரணம் காட்டி, சுவப்ணாவின் தந்தை அதிர்ச்சி முடிவை எடுத்தார். அதன்படி தனது மகளை, மணமகனின் அப்பாவான ரோஷன் லாலுக்கு திருமணம் செய்துவைத்தார். மணப்பெண் சுவப்ணாவும் வேறு வழியின்றி ரோஷனைத் திருமணம் செய்து கொண்டார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,935.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.