Show all

இனி நடுவண் அரசில், மாநிலக் கட்சிகளின் கூட்டணி ஆட்சிக்கு வழிகோலும் அடுத்தடுத்த நகர்வுகள்

15,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சிவசேனாவைத் தொடர்ந்து பாஜகவுடனான கூட்டணியில் இருந்து ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியும் வெளியேற உள்ளது. அமராவதியில் செய்தியாளர்களிடம் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: ஆந்திராவில் கூட்டணி தர்மத்தை நாங்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம். ஆனால் மாநில பாஜக தலைவர்கள் இதை மீறி வேறுபல உள்ளடி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் எங்களது கட்சி தலைவர்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர். அவர்களை நாங்கள் கட்டுப்படுத்தி வைத்துள்ளோம். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்குதேசம் நீடிப்பதை

பாஜக விரும்பவில்லை எனில் நாங்கள் எங்கள் முடிவை எடுக்க வேண்டிய நிலை வரும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

ஏற்கனவே 25 ஆண்டுகாலமாக பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா அண்மையில் உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,681

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.