Show all

கிறிஸ் கெயிலை ஏலத்தில் எடுக்க அதிக ஆர்வம் காட்டாததற்கான காரணம் என்ன?

IPL கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறப்பான வீரர்களில் கிறிஸ் கெயிலும் ஒருவர். இவர் இதுவரை 101 IPL போட்டிகளில் விளையாடி 3626 ரன்களை குவித்துள்ளார். இவர் தான்  IPL கிரிக்கெட் வரலாற்றிலேயே தனியாக அதிக ரன் (175 ரன்) குவித்த வீரர் ஆவர். மேலும் அதிக சதம் (ஐந்து சதம்) அடித்த வீரரும் இவர் தான். எனினும் இவரை எந்த அணியும் கடைசி வரை ஏலத்தில் எடுக்க அதிக ஆர்வம் காட்டவில்லை. இறுதியாக மூன்றாவது முறையாக ஏலம் விட்ட போது தான் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ 2 கோடி விலைக்கு ஏலத்தில் எடுத்து. 
 
கிறிஸ் கெயிலை ஏலத்தில் எடுக்க அதிக ஆர்வம் காட்டாததற்கான ஐந்து காரணங்கள்:

  1. கடந்த 2017 ஆம் ஆண்டு IPL போட்டியில் மொத்தம் 8 போட்டியில் விளையாடி 152  ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். 
  2. 2. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் 4 போட்டியில் வெறும் 109 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். 
  3. கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் நடைபெற்ற நியூஸிலாந்து மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான நான்கு ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 22 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். இதில் ஒரு ஆட்டத்தில் "டக் அவுட்" மற்றொரு ஆட்டத்தில் 12 மட்டுமே எடுத்துள்ளார்.
  4. கிறிஸ் கெய்லின் தற்போதைய பார்ம் மோசமாக இருப்பதும் ஒரு காரணம்.
  5. தற்போது நடைபெற்ற ஏலம் மூன்று வருடங்களுக்கு பொருந்தும், தற்போது அவரின் வயது 38, எனவே இன்னும் இரண்டு வருடங்கள் அவரால் விளையாட முடியுமான என்ற சந்தேகமும் ஒரு காரணம்.

எனினும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இவரை ஏலத்தில் எடுத்தது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.