04,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: குஜராத், இமாசலபிரதேச தேர்தல்களில் பா.ஜனதாவின் வெற்றியால் பிரதமர் மோடியின் சர்வாதிகார போக்கு மேலும் அதிகரிக்கும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி கூறியதாவது: குஜராத் தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ள போதிலும் காங்கிரசுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதாவை மதசார்பற்ற சக்திகள் வெல்ல முடியாதது வருத்தம் அளிக்கிறது. மதசார்பற்ற சக்திகள் மேலும் வலிமையுடனும், ஒற்றுமையுடனும் இணைந்து செயல்படுவது அவசியமானது. 2 மாநில தேர்தல் வெற்றி மூலம் பிரதமர் மோடியின் சர்வாதிகார போக்கு மேலும் அதிகரிக்கும். இது இந்திய மக்களாட்சித் தத்துவத்திற்கு உகந்தது அல்ல. பா.ஜனதாவும் தனது இந்துத்துவா கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்த முயலும். இவ்வாறு அவர் கூறினார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,641
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.