Show all

வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்திருக்கும் பாஜக என்ற ஐயம்! நடந்து முடிந்த தேர்தல்களிலும் தொடர்கிறது

04,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்திருப்பதால்தான் குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிரூபம், தொடக்கத்தில் இருந்தே நாங்கள் சந்தேகப்பட்டோம். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளது. பாஜக வெற்றி பெற்றதற்கு அதுதான் காரணம். இது மக்களாட்சித் தத்துவத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று கீச்சுவில் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் பட்டிதார் சமூகத் தலைவரான ஹர்திக் படேலும்,

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன. ஏடிஎம் இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும்போது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏன் செய்ய முடியாது?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் - மோடிஅரசு, நிருவாகத்தை விரும்பிய படியெல்லாம் வளைத்துக் கொண்டிருப்பதைக் கண்கூடாக அனுபவித்துக் கொண்டிருக்கிற தமிழக அரசியல் பார்வையாளர்களால் மோடி அரசால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்பதை நம்பாமல் இருக்க முடியவில்லை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,641

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.