22,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஜியோவிற்கு எதிரான கைகளை உயர்த்த இதர தொலைத் தொடர்பு இயக்குநர்கள் அனுதினமும் முயன்று வருகிற நிலைப்பாட்டில், பார்தி ஏர்டெல் நிறுவனம் ஓசைமின்றி ஒரு புதிய கட்டணத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஏர்டெல் ரூ.509 கட்டணத்திற்கான திட்டமானது 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் காலத்துடன், குரல் அழைப்பு, தரவு மற்றும் சேதி நன்மைகளையும் வழங்குகிறது. ரூ.509 வழங்கும் அதே நன்மைகளை மொத்தம் 70 நாட்களுக்கு வழங்கும் நிறுவனத்தின் ரூ.448க்கான திட்டம் தற்போது நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிறது. புதிய ரூ509 திட்டத்தால் வாடிக்கையாளர் மேலும் ரூ28.60க்கு கூடுதல் நன்மை அடைகிறார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,630
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.