Show all

அட்டைப் பெட்டியில் ஓவியர் மற்றும் வழக்கறிஞரின் பிணங்கள்- மும்பையில் பரபரப்பு

அட்டைப் பெட்டியில் ஓவியர் மற்றும் வழக்கறிஞரின் பிணங்கள் இருந்த விவகாரம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ஓவியரும், கலை நிபுணருமான ஹெம உபத்யாய் மற்றும் அவரது வழக்கறிஞர் ஹரிஸ் பாம்பானி கொலை செய்யப்பட்டு இருவரது உடலும் அட்டைப் பெட்டிக்குள் அடைக்கப்பட்ட நிலையில் சுபர்பான் கண்டிவலி பகுதியில் சாக்கடை ஒன்றின் அருகே கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக இதுவரை 3 பேரை கைது செய்த மும்பை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.