மதிமுகவில் இருந்து மேலும் மூன்று மாவட்ட செயலாளர்கள் விலகப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜோயல், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் தில்லைசெல்வம் வைகோவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் இந்த மூவரும் இன்று மாலை திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து திமுகவில் இணையப் போவதாக தெரிகிறது. மதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக விலகி வருகின்றனர். பெரும்பாலானவர்கள் திமுகவில் தங்களை இணைத்து கொண்டு கட்சிப் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தென் மாவட்ட மதிமுக நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைய இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட மதிமுக செயலாளர் தில்லை செல்வம் உள்ளிட்டோர் நேற்று நாகர்கோவிலில் இருந்து சென்னை புறப்பட்டு சென்றனர். இன்று மாலை அவர்கள் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.