Show all

சுரங்கவழி சாலை திறப்பு நிகழ்வில் இளைஞர்கள் குறித்து பிரதமர் மோடி புண்படுத்தும் பேச்சு

ஜம்முவையும், சிரிநகரையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையைத் திறந்து வைத்து, பேசிய பிரதமர் நரேந்திர மோடி,

     ‘காஷ்மீர் மாநில இளைஞர்கள் சுற்றுலாவைத் தேர்ந்தெடுக்க போகிறீர்களா? இல்லை. தீவிரவாதத்தை தேர்தெடுக்கப் போகிறீர்களா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

     மேலும், ‘தவறான வழிகாட்டுதல்களினால், சில இளைஞர்கள் தீவிரவாதத்தை நோக்கி கல் எறிந்து கொண்டிருக்கிறார்கள்; வேறு சிலரோ சுரங்கப்பாதைக்காக, கல் உடைத்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்றார்.

     நம்ம டி.இராஜேந்தர் மாதிரி பேசுகிற அடுக்கு மொழி ஆர்வத்தில்  பிரதமரின் இத்தகைய பேச்சு காஷ்மீர் இளைஞர்கள் மட்டுமல்லாது அம்மாநில மக்களிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.