Show all

தேநீர்கடைக்காரர் மாதவருமானம் ரூ.12 லட்சமாம்! ஐயகோ வேண்டாம் இன்னொரு தேநீர் கடைக்காரர் பெருமை

21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் செயல்பட்டு வரும் யேவ்லே டீ ஹவுஸ் நிறுவனர், மாதமொன்றிற்கு ரூ. 12 லட்சம் வருமானம் ஈட்டி வருகிறாராம். செய்தி இதழ்கள் புகழாரம்! இந்த நிறுவனம், தற்போது புனேயின் புதிய அடையாளமாகவும் உருமாறியுள்ளதாம்.

இதுதொடர்பாக, யேவ்லே துணை நிறுவனரான நவ்நாத் யேவ்லே கூறியதாவது, நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு சுவையான அதேசமயம் தரமான, முதல்தர தேநீர் வழங்கி வருகிறோம். இதுவே, வாடிக்கையாளர்கள் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதற்கான காரணம் ஆகும். தங்களது வாடிக்கையாளர்களுக்காக, சர்வதேச தரத்திலான தேநீர்ப்பொடி விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அவர் கூறியதோடு,

தங்களது தேநீர் வணிகம்; தலைப்புச்செய்தி ஆகும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று அவர் மேலும் கூறினாராம்.

தமிழகம் கலைத்துறையில் முதல்வரை- அறிமுகம் ஆனவர், அவரைப் பற்றி நன்கு தெரியும், என்ற காரணத்தால் தேடுகிறது.

நடுவண் அரசில் தேநீர் கடைக்காரரை அமரவைத்து, மக்களை அவர் நள்ளிரவுகளில் தெருவில் அமர வைத்து விட்டார். இந்தியத் தலைமை அமைச்சர் கனவில் இவர் தன்னுடைய பிரதாபங்களைச் சொல்லுவாரானால் இந்திய மக்கள் விழித்துக் கொள்ளுங்கள் இன்னொரு தேநீர்கடைக்காரர் பெருமை வேண்டாம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,717.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.