Show all

மக்களை முட்டாளாக்குவதில் கைதேர்ந்த பாஜகவிடமிருந்து மக்களை விடுவிப்பதே தலையாய கடமை: அகிலேஷ்

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மக்களை முட்டாளாக்குவதில் பாஜக கைதேர்ந்த கட்சி என முன்னாள் முதல்வர் அகிலேஷ் கூறியுள்ளார்.

உ.பி.யில் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியின் மாநில மாநாடு மேற்குவங்க மாநிலத்தில் நடந்தது.

கலந்து கொள்ள மேற்குவங்கம் வந்த அகிலேஷ் கோல்கட்டாவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போதுதான் பாஜக குறித்து இவ்வாறு கூறினார். பாஜக விற்கு எதிராக மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்று திரள வேண்டும். அடுத்த இரண்டாண்டுகளில் நாம் சந்திக்கவிருக்கிற தேர்தலில் சமாஜ்வாதி கட்சி மிகப்பெரிய சக்தியாக வளரும். மக்களை முட்டாளாக்குவதில் பாஜக ஒரு கைதேர்ந்த கட்சி. அந்தக் கட்சியிடமும் மோடியிடமும் இருந்து மக்களை விடுவிப்பதே கட்சிக்கிருக்கிற தலையாய கடமை என்றும் தெரிவித்தார். முன்னதாக மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜியை அகிலேஷ் சந்தித்தார். அப்போது அவர்,

ஒவ்வொரு முறையும் நான் கோல்கட்டா வந்தால் நிச்சயம் மம்தா பானர்ஜியை சந்திப்பேன். பாஜகவை எதிர்க்கும் திரிணாமுல் கட்சிக்கு சமாஜ்வாதி என்றும் ஆதரவு தரும் என்றார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,624

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.