Show all

குஜராத் மாடல் என்பது ஒரு கட்டுக்கதை.

குஜராத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி, ஆளும் பாஜக அரசுக்கு எதிராக படேல் சமூகத்தினரின் இடஒதுக்கீடு போராட்டக்குழுவை ஒருங்கிணைத்துப் போராட்டம் நடத்தியதன் மூலம் பலரால் பேசப்பட்டவர் ஹர்திக் படேல்.

இந்நிலையில், காந்தி நகரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவரது அடுத்த கட்ட போராட்டம் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது குஜராத் மாடல் குறித்த மோடியின் மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பேன் என்று கூறினார்.

குஜராத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக பெருமை பேசி வரும் மத்திய அரசை கேட்கிறேன். கடந்த வாரத்தில் மட்டும் 2 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்களே ஏன்?

அப்பாவி பெண் கொடூரமாக தாக்கப்பட்டு காவல்நிலையத்திதிற்கு கொண்டு சென்று ஜெயிலில் அடைக்கப்பட்டார் ஏன்?

பணிக்கு ஆட்கள் தேர்வு செய்வதில் முறைகேடு செய்தவர்கள் இதுவரை தண்டிக்கப்படவில்லையே ஏன்?

படேல் சமூகத்தினர் மீதான போலீஸாரின் வன்முறை ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால், பாஜக தலைமையிலான மாநில அரசு தனது சுயலாபத்திற்காக உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தி வருகிறது. இதுதான் குஜராத் மாடலா?

இந்தியா முழுவதும் இந்த மாடலை அறிமுகப்படுத்த போகிறேன் என பெருமை பேசி வரும் பிரதமர் மோடியின் கனவு நிஜமானால் என்ன நடக்கும் இந்த நாட்டில்?

குஜராத் மாடல் என்பது ஒரு கட்டுக்கதை. அதற்கு பின்னால் இருக்கும் மர்ம முடிச்சுகளை விரைவில் நான் அவிழ்ப்பேன். குஜராத் மாடல் பற்றிய உண்மைக்கு புறம்பான ஒன்றை எங்கள் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருவது நாட்டை தவறான பாதைக்கு இட்டுச் செல்வதாக அமைந்துவிடும் என்று கூறினார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.