Show all

தன் செல்பேசியை ஆராய்ந்த கணவரின் விரல்களை கத்தியால் வெட்டிய மனைவி

பெங்களூரில் மனைவியின் செல்போனை கணவர் எடுத்து ஆராய்ந்ததால் அவரின் விரல்களை கத்தியால் வெட்டி உள்ளார் மனைவி.

 

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் சிங், அவரது மனைவி பெயர் சுனிதா சிங், இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக பெங்களூரில் வசித்து வருகின்றனர். பிரகாஷ் சிங் பெங்களூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுனிதா சமீபத்தில் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். வேலையில் இருந்து ராஜினாமா செய்த சுனிதா எப்பொழுது பார்த்தாலும் செல்போனும், கையுமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4 -தேதி பணி முடிந்து இரவு 11 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார்  சந்திர பிரகாஷ். அப்போது சுனிதாவிடம் சமையல் ஏன் செய்ய வில்லை என்று கேட்டுள்ளார். ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளேன் சிறிது நேரத்தில் வந்து விடும் என்று கூறி செல்போனில் மூழ்கி போனார் சுனிதா. இதனால் அவ்வபோது இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் அப்படி என்ன தான் உள்ளது அந்த செல்போனில் என்று மனைவியின் செல்போனை பறித்து பார்த்துள்ளார். மேலும் மனைவிக்கு அனுப்பட்ட குறுந்தகவல்களையும் ஆராய்ந்துள்ளார். மேலும் சமையல் அறைக்கு சென்ற சுனிதாவை சரமாரியாக அடித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த சுனிதா  சமையல் அறையில் வைத்துள்ள கத்தியை எடுத்து கணவன் என்று கூட பார்க்காமல் அவரது வலது கை விரல்களை கிழித்து விட்டார்.

 

தற்போது இருவரும் காவல்துறையிடம் சென்று புகார் அளித்துள்ளனர். கணவன் தன்னை அடித்தாகவும் மனைவியும், மனைவி தன்னை கத்தியால் விரலைக் கிழித்துள்ளதாகவும், ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளனர். மனைவி மொபைல் போனுக்கு அடிமையாகி விட்டதே இந்த பிரச்னைக்கு காரணம் என கணவர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.