17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பாஜக எப்போது கூட்டம் போட்டாலும் அது இருக்கை திருவிழாவாகவே முடியும். அதாவது இருக்கைகள் வரிசையாகப் போடப்பட்டிருக்கும். மக்கள் யாரும் வந்திருக்க மாட்டார்கள். இதுதான் தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாக பாஜகவின் நிலை, இப்போது அந்த அரிய இருக்கைத் திருவிழா கருநாடகாவிலும் பாஜகவால் வெற்றிகரமாக நடத்தப் பட்டது. கர்நாடகாவில் மோடி நடத்திய கருத்துப் பரப்புதல் கூட்டத்தில் மக்கள் மிகவும் குறைவாக பங்கேற்ற காணொளி வெளியாகி இருக்கிறது. கர்நாடகாவில் இன்னும் சில வாரத்தில் மாநில தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக பாஜக தீவிரமாக கருத்துப் பரப்புதல் செய்து வருகிறது. இந்த நிலையில் பாஜக நடந்தும் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள மோடி தேவங்கிரி வந்து இருந்தார். இது அவர் மூன்றாவது முறையாக கர்நாடக வருவதாகும். இந்த நிகழ்ச்சி கடந்த செவ்வாய் கிழமை நடந்தது. இந்த நிலையில் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் அவர் பேச்சைக் கேட்க கொஞ்சம் கூட கூட்டம் வரவில்லை. அதேபோல் இருந்த கூட்டமும் நேரம் ஆக ஆக குறைந்து கொண்டே இருந்தது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,713.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.