17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: புதிதாக மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை தொடங்கியுள்ள கமல், கட்சியின் 10 பேர் கொண்ட மாநில பேச்சாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இல்லத்தில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கமல், மதுரை மாநாட்டில் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என பெயர் வைத்து கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து அரசியில் வேலைகளில் கமல் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் தனது கட்சிக்கு 10 பேர் கொண்ட பேச்சாளர்களை கமல் அறிவித்துள்ளார். ஓய்வு பெற்ற இந்திய காவல் பணித்துறை அதிகாரி மவுரியா, எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், முரளி அப்பாஸ், கமிலா நாசர், பட்டிமன்ற பேச்சாளர் ஞான சம்பந்தன், ரங்கராஜன், ஆர்.ஆர்.சிவராமன், சவுரி ராஜன், நடிகை ஸ்ரீபிரியா மற்றும் கவிஞர் சினேகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,713.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.