Show all

பாஜகவிலும், எதிர்தரப்பிலும் செவிபொறுக்காத கடும் எச்சரிக்கைகள்

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: பீஹாரின் உஜியார்பூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நித்யானந்த் ராய், பிரதமர் மோடியை நோக்கி நீட்டப்படும் விரல்களை வெட்டுவோம் எனக்கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலுவின் மனைவியும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி, பாட்னாவில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசுகையில்,

மோடியைக் குற்றஞ்சாட்டுபவர்களின் விரல்களை வெட்டுவோம் என பாஜகவினர் கூறுகின்றனர். செய்து பாருங்கள். நாட்டு மக்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். பீஹார் மக்களும் அமைதியாக இருப்பார்களா?

இங்குள்ள பலர் பிரதமர் மோடியின் கழுத்தை அறுக்கவும், கையை வெட்டவும் தயாராக உள்ளனர். இதற்காக சிறைக்கு செல்லவும் தயாராக உள்ளனர் என்று

கூறியுள்ளார்.

மேலும், அமலாக்கத்துறை, நடுவண் புலனாய்வுத் துறை, வருமான வரித்துறை விசாரணை எதுவாக இருந்தாலும், அவர்களை பற்றி எனக்கு தெரியும். நாங்கள் என்ன தவறு செய்தோம். இதற்கு நடுவண் மாநில அரசுகள் பதில் சொல்ல வேண்டும். இதற்காக அவர்கள் அழைப்பாணை அனுப்பட்டும். இதற்காக பயப்பட மாட்டேன். என்னிடம் அவர்கள் விசாரணை நடத்த வேண்டு மென்றால், அவர்கள் பாட்னா வந்து தான் கேள்வி கேட்க வேண்டும். இவ்வாறு ராப்ரி தேவி பேசினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,614

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.