21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புல்வாமா தாக்குதலை அரசியலாக்குவதை நிறுத்துங்கள்! என இந்தியாவில் முதல் மனிதராகப் பதிவிட்டு, நரேந்திர மோடிக்கு நடிகர் சித்தார்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 'புல்வாமா தாக்குதல் அரசியலாக்கப் படுகிறது' என்று பலரும் குசுகுசுத்தும், கிசுகிசுத்துக் கொண்டிருந்தாலும், அதை வெளிப்படுத்தினால் எங்கே தங்களை பாஜக: மோடிக்கு எதிரான கருத்தை, போற்றுதலுக்குரிய இந்திய இராணுவத்திற்கு எதிரான கருத்தாக மாற்றி தேசத்துரோகிகள் என்று கூச்சலிடத் தொடங்கி விடுமோ என்று அஞ்சி, நாம் உண்டு நமது ஊழல் உண்டு என இருந்து விட்ட நிலையில், புல்வாமா தாக்குதலை அரசியலாக்குவதை நிறுத்துங்கள்! என இந்தியாவில் முதல் மனிதராகப் பதிவிட்டு, நரேந்திர மோடிக்கு நடிகர் சித்தார்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் புல்வாமா தாக்குதல் குறித்து ஆதாரம் கேட்டு வருகின்றன என்று பாஜக பொதுக்கூட்டத்தில் மோடி பேசி வருகிறார்: பாலகோட்டில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய அன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போதும், இந்த மண்ணுக்காக நான் சபதம் ஏற்றுள்ளேன். இந்த மண் வீழ நான் விடமாட்டேன். இந்த நாடு செயல்படாமல் நின்றுபோகவும் அனுமதிக்க மாட்டோம். நாடு வளைந்து போகவும் அனுமதிக்க மாட்டேன். எனது தாய்நாட்டுக்கு நான் அளிக்கும் உறுதி இது. உங்கள் தலை பிறரை வணங்கும் வகையில் விட மாட்டேன். நமது ராணுவ வீரர்களுக்கு எனது வணக்கங்கள் என்று கூறியிருந்தார். மேலும், நான் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று விரும்புகிறேன். எதிர்க்கட்சிகளோ என்னை ஒழித்துக்கட்ட சதி செய்கின்றன என்று அவர் கூறியிருந்தார். இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் குறித்து நரேந்திர மோடியின் தொடர் பேச்சு குறித்து நடிகர் சித்தார்த் தனது கீச்சுப் பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய மக்கள் பாதுகாப்புப் படையினர் மீது நம்பிக்கை கொண்டு, அவர்களுக்கு பக்கபலமாக நிற்கிறார்கள். ராணுவம் தாக்குதல் நடத்தியதை மக்கள் நம்புகின்றனர். உங்களையும் (மோடி), உங்களுடைய கூட்டத்தையும்தாம் மக்கள் நம்பவில்லை. புல்வாமா தாக்குதலை அரசியலாக்குவதை நிறுத்துங்கள். உண்மையான மாவீரர்களுக்கு முன் நின்றுகொண்டு, மாவீரர் போல நடிப்பதை நிறுத்துங்கள். பாதுகாப்புப் படையினருக்கு நீங்கள் மரியாதை கொடுங்கள். நீங்கள் ராணுவ வீரர் கிடையாது. அவ்வாறு உங்களை நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதை நிறுத்துங்கள். இவ்வாறு சித்தார்த் கூறியுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,082.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.