Show all

ஏப்ரல் 1 முதல் ரோமிங் கட்டணம் ரத்து: ஜியோவுக்குப் போட்டியாக ஏர்டெல் அதிரடி

இந்தியா முழுவதும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரோமிங் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

     ஜியோ வருகைக்குப்பின் தொலைத்தொடர்பு சந்தையில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வோடபோன், ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் புதுப்புது சலுகைகளை அறிவித்து வருகின்றன.

     இந்நிலையில், முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் இந்தியா முழுவதும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கால் மற்றும் டேட்டாவுக்கான ரோமிங் கட்டணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. மேலும், வெளிநாடு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் ரோமிங் கட்டணங்களை வழங்கவும் ஏர்டெல் முடிவு செய்துள்ளது.

     இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘நாங்கள் உள்நாட்டு ரோமிங் கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம்’

என தெரிவித்துள்ளது.

     மார்ச் மாத இறுதியுடன் ஜியோ இலவச சேவைகள் அனைத்தும் முடிவுக்கு வருகின்றன. இதனையொட்டி ஏர்டெல் நிறுவனம் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் டெலினார் நிறுவனத்தை ஏர்டெல் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.