Show all

நடிகை பிரியங்கா சோப்ராவின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குக: அறங்கூற்றுமன்றம்

23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119:; நடிகை பிரியங்கா சோப்ரா ஜார்கெண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் பிறந்தவர். இவரது தந்தை அசோக் சோப்ரா ராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார்.

பிரியங்காவின் தந்தை நாட்டின் பல இடங்களுக்கு பணிமாற்றத்தில் செல்லவேண்டியிருந்தது. அடிக்கடி பிரியங்கா குடும்பம் இடம்பெயர்ந்தது.

பிரியங்கா சோப்ரா தமிழ்தொடர்ஆண்டு-5112ல் (2000) உலக அழகி பட்டம் வென்று புகழ் வெளிச்சத்துக்கு வந்தார். அப்போது அவர் குடும்பம் உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் வசித்து வந்தது. பரேலி தொகுதியின் 5-வது பகுதி வாக்காளர் பட்டியலில் பிரியங்கா குடும்பத்தினரின் பெயர் இருந்தது. திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கிய பிறகு பிரியங்கா சோப்ரா குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது. ஆனாலும் அவர்கள் பெயர் பரேலி தொகுதி வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து இருந்தது.

பிரியங்கா குடும்பம் அதற்குப் பிறகு எந்தத் தேர்தலிலும் வாக்களிக்கவில்லை. இதனால் பரேலியைச் சேர்ந்த ஒருவர், பிரியங்கா சோப்ரா பரேலி தொகுதியிலும் இல்லை. அவர் ஓட்டளிப்பதும் இல்லை. இதனால் அவரது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று பரேலி அறங்கூற்று மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த அறங்கூற்று மன்றம் பிரியங்கா சோப்ரா, மற்றும் அவரது தாய் மது சோப்ரா ஆகியோரின் பெயரை வாக்களார் பட்டியலிலிருந்து நீக்க உத்தரவிட்டது. தந்தை அசோக் சோப்ரா 4 ஆண்டுக்கு முன்பே இறந்து விட்டதால் அவரது பெயர் ஏற்கெனவே வாக்காளர் பட்டியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது.

-அப்பாடா இனி இந்தியாவிற்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.

தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,601

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.