Show all

கர்நாடகாவில் ஓட்டுநர் இன்றி ஓடத் தொடங்கிய தொடர்வண்டி எஞ்சின்

23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119:; கர்நாடகாவில் வாதி என்ற தொடர்வண்டி நிலையத்தில் இருந்த டீசல் தொடர்வண்டியின் எஞ்சின் ஒன்று தொழிலாளி செய்த தவறு காரணமாக தானாக ஓடத் தொடங்கி இருக்கிறது.

முதலில் மெதுவாக சென்ற இந்த தொடர்வண்டியின் எஞ்சின் போக போக வேகம் எடுக்கத் தொடங்கி இருக்கிறது. மேலும் இந்த தொடர்வண்டியின் எஞ்சின் மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும் பல தொடர்வண்டி நிலையங்களை வேறு கடந்து சென்று இருக்கிறது.

இந்த தொடர்வண்டியின் எஞ்சினை வேகமாக பைக்கில் துரத்தி சென்ற ஓட்டுநர் பல கிமீ பயணித்த பின் ஒருவழியாக சாகசம் செய்து தொடர்வண்டியின் எஞ்சினை நிறுத்தினார்.

இந்த நிலையில் அந்த தொடர்வண்டியின் எஞ்சின் 13 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் பயணித்து இருக்கிறது. மேலும் பல தொடர்வண்டி நிலையங்களை தாண்டி சென்று இருக்கிறது.

யாருக்கும் பாதிப்பு இல்லை இந்த ரயில் சென்ற பாதைகள் அனைத்தும் சரியாக தகவல் தெரிவிக்கப்பட்டு சரி செய்யப்பட்டது. இதன் காரணமாக இதில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என தொடர்வண்டித்துறை நிர்வாகம் கூறி இருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,601

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.