Show all

வாடிவாசலை உடைத்துக் கொண்டு சீறிப்பாய்கிறது மோடிகாளை

23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் தினகரன், சசிகலாவின் கணவர் நடராசன் மற்றும் அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளனர்.

ஜெயா தொலைக்காட்சி அலுவலகம், போயஸ் தோட்ட அலுவலகம், கோட நாடு எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது.

இந்த சோதனையின் பின்னணியில் நடுவண் அரசு இருப்பதாக தினகரன் தரப்பினர் தெளிவு படுத்தி வருகின்றனர். சோதனை குறித்து பல்வேறு தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் இந்த சோதனை குறித்து நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், ஏற்கனவே நடந்த வருமான வரித்துறை சோதனைகளைப் பட்டியலிட்டார்.

இந்தச் சோதனைகளுக்கு அரசியல் பின்னணி இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளிக்கவில்லை. வாடிவாசலை உடைத்துக் கொண்டு சீறிப்பாய்கிறது மோடிகாளை; நமக்கேன் வம்பு என்று தமிழக அரசியல் மாடுபிடி வீரர்கள் ஒதுங்கி நிற்கிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,601

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.