Show all

ராஜ்தானி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து

இன்று காலை 6:20 மணிக்கு டெல்லி சென்ற ராஜ்தானி தொடர்வண்டியின் கடைசி பெட்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது இந்த தொடர்வண்டி விபத்தில் பயணிகள் யாருக்கும் காயமில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

தடம் புரண்ட தொடர்வண்டி பெட்டியை சீர் செய்யும் பணியில் இருப்புப் பாதைதுறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தகவலை வடக்கு இருப்புப் பாதைதுறை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

வட இந்தியாவில் தொடர்ந்து தொடர்வண்டி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. வடஇந்தியாவின் அதிகாரிகள், பணியாளர்கள், இருப்புப் பாதை துறை அமைச்சகம் ஆகியோரின் பொறுப்பற்ற தன்மையை இது வெளிப் படுத்துகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.