Show all

மலேசியாவில் மதரஸா பள்ளியில் தீ விபத்து; பலி எண்ணிக்கை 25ஐ தாண்டியது

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் மதரஸாவில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் மாணவர்கள் உள்பட 25 பேர் பலியாகினர்.

     தி தருல் குரான் இட்டிஃபா எனும் பள்ளியில், அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 5.15 மணிக்கு திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் மாணவர்கள் உட்பட 25 பேர் பலியாயினர்.

     தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பலியானவர்களின் உடல்கள் அருகிலுள்ள மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

     இது குறித்து தகவல் தெரிவித்துள்ள மலேசியா பிரதமர் நஜீப் ரஸாக் தீ விபத்து திடீரென ஏற்பட்டதாக தனது கீச்சு பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.