Show all

விஜய் தொலைக்காட்சி நாடகத்து சின்னத்தம்பி போல சரியான இடத்திற்கு வந்திருக்கிறார் ராகுல்

06,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜகவின் கோட்டையைத் தகர்க்கவே முடியாது. எங்கள் அரசு ஊழல் இல்லாத அரசு ராகுல் தன்னைத் தானே தலைமை அமைச்சர் வேட்பாளர் என்று சொல்லிக் கொள்கிறார். அரசியல் அறியாதவர். சிறுபாலகன் என்றெல்லாம் வாய்மாலம் செய்து வந்த பாஜகவின், ஊழல் ஆணிவேரையே பற்றி விட்டார் ராகுல் காந்தி. 

இந்த ராகுல் சின்னத்தம்பியின் அடுத்த அடிகளை இனிமேல்தான் பார்க்கப் போகிறது பாஜக என்று காங்கிரசார் பெருமிதத்தில் இருப்பதற்கான செய்தி! ராபேல் போர் விமான ஊழல் குறித்தான பிரான்சின் முன்னாள் அதிபர் ஹோலண்டேவின் உறுதியான தகவல்.

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் இந்திய அரசு அனில் அம்பானிக்கு ஆதரவாக இருந்தது என பிரான்சின் முன்னாள் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: பிரான்ஸ் நாட்டின் ரபேல் ரக போர் விமானம் தயாரிப்பதற்காக டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. இதில் இந்தியாவின் சார்பில் அனில் அம்பானியை பங்குதாரராக சேர்த்து கொள்ளும்படி இந்திய அரசு கேட்டுக்கொண்டது.

முன்னதாக, பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து, 36 ரபேல் வகை போர் விமானங்களை வாங்க, இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. விமானத்தின் உதிரி பாகங்களைத் தயாரிக்கவும், பழுதுபார்க்கவும், ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அந்த நிறுவனம், 42 ஆயிரம் கோடி ரூபாய் ஆதாயம் அடையும் என்றும், காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம் சாட்டு நிரூபணம் ஆகிவருகிறது.

விநாயகர் அருளால் படிக்காத சின்னத்தம்பி சரியான இடத்திற்கு வந்தது போல, அரசியலில் இளையவர் என்று பாஜகவால், நையாண்டி செய்யப் பட்டு வந்த ராகுல், தன் தொடர் முயற்சியால் சரியான இடத்திற்கு வந்து விட்டார் என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,918.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.