Show all

வலுவடைந்து வரும் அம்ருதா தரப்பு ஆதாரங்கள்

15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுக்கும் செயலலிதாவுக்கும் பிறந்த மகள்தான் தற்போது உரிமை கோரும் அம்ருதா என செயலலிதாவின் தோழி கீதா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

செயலலிதா மறைந்த உடன் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்; அவரது மரணத்துக்கு நியாயம் தேவை என அறங்கூற்று மன்றக் கதவுகளைத் தட்டியவர் அவரது தோழி கீதா.

இந்நிலையில் செயலலிதாவுக்கும் சோபன்பாபுவுக்கும் பிறந்த மகள் நான்; செயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என பெங்களூரு அம்ருதா உச்ச அறங்கூற்று மன்றத்துக்குப் போனார். அவரது கோரிக்கையை நிராகரித்த உச்ச அறங்கூற்று மன்றம், கர்நாடக உயர் அறங்கூற்று மன்றத்தில் மனு பதிகை செய்ய அறிவுறுத்தியது.

இதனிடையே செயலலிதாவின் அத்தை மகள் லலிதா என்பவரும் சோபன்பாபுவுக்கும் செயலலிதாவுக்கும் குழந்தை பிறந்தது; செயலலிதாவுக்கு பிரசவமே நாங்கள்தான் பார்த்தோம் என அதிரடியாக குண்டுகளை வீசினார். தற்போது அம்ருதாவை பாதுகாத்து வருவதும் செயலலிதாவின் உறவினரான ரஞ்சனி ரவீந்தரன் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த களேபரங்களுக்கு மத்தியில் பேட்டியளித்த செயலலிதாவின் தோழி கீதா, சோபன்பாபுவுக்கும் செயலலிதாவுக்கும் பிறந்த பெண்தான் அம்ருதா. இது செயலலிதாவுக்கும் தெரியும். சசிகலாவுக்கும் தெரியும். அம்ருதாவுக்கு போயஸ் தோட்டத்தில் என்னவெல்லாம் நடந்தது என்பது டி.என்.ஏ. பரிசோதனைக்குப் பிறகுதான் தெரியவரும். டி.என்.ஏ. பரிசோதனையை அம்ருதாவுக்கு முதலில் நடத்துங்கள்.. அப்போதுதான் உண்மை தெரியவரும். அம்ருதாவைப் பொறுத்தவரையில் பணம், சொத்து எதற்கும் ஆசைப்படவில்லை. செயலலிதாவின் மகள் என்கிற உரிமையே போதும் என நினைக்கிறார்.

அம்ருதா சொல்வது உண்மை என நிரூபணம் ஆகும் நிலையில் தமிழக அரசியலில் பெரும் மாற்றமே வரும் என புதிய அணுகுண்டை வீசியுள்ளார் கீதா.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,623

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.