Show all

அச்சுறுத்தி பயன்படுத்திக் கொள்ளும் பாஜகவிற்கு அடிபணியும் அதிமுக : வைகோ சாடல்

15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கோவையில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த வைகோ செய்தியாளார்களிடம் கூறியதாவது:

தமிழகத்தின் வாழ்வாதாரத்தினை கெடுக்கும் திட்டத்தினை நடுவண் அரசு மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக மீத்தேன், நியூட்ரினோ திட்டத்தால் நடுவண் அரசு ஆதாயம் பெறும், ஆனால் தமிழகம் பாலைவனமாகிவிடும்.

அள்ளித்தெளித்த அவசரகோலமாக அறிவித்த இந்த சரக்கு,சேவைவரியால் தொழில் முடக்கப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழப்பு நிலை ஏற்பட்டுள்ளது. அவற்றை மீட்க நடுவண் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதுகெலும்பற்ற நிலையில் உள்ள அதிமுக அரசை மனதளவில் பயமுறுத்தி தனக்கு சாதகமானதை நடுவண் அரசு செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,623

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.