Show all

இந்திய ராணுவ ஆளில்லா உளவு விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் அறிவிப்பு

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான ஆளில்லா உளவு விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர் ஜெனரல் ஆசிப் காபூர் தெரிவித்துள்ளதாவது:

எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ராக்சிக்ரி செக்டார் பகுதியில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஆளில்லா உளவு விமானம் ஒன்று பாகிஸ்தான் ராணுவத்தால் இன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் பாகங்களை நாங்கள் கைப்பற்றியுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆனால் இது தொடர்பாக இந்திய ராணுவத்தின் தரப்பில் இருந்து எந்த எதிர்வினையும் வெளியிடப்படவில்லை

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.