கச்சத்தீவு பிரச்சினையில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று சட்டமன்றத்தில்
முதலமைச்சர் ஜெயலலிதா உறுதிப்பட கூறினார். இதற்கு தி.மு.க.வினர் இடையூறு செய்யாமல் இருந்தால் போதும் என்றும்
அவர் கூறினார். கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோது பேசாமல் இருந்துவிட்டு இன்று
எங்களைப் பார்த்து கேள்வி கேட்பதா என்றும் முதல்வர் கேட்டார். கச்சத்தீவு தாரைவார்க்க
கருணாநிதியே காரணம்; கச்சத்தீவு பற்றி பேச தி.மு.க.வுக்கு அருகதை இல்லை என்றும் ஜெயலலிதா
காட்டமாக கூறினார். இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், தி.மு.க. சட்டமன்றஉறுப்பினர்
பொன்முடி பேசியபோது உடனுக்குடன் எழுந்து
ஆதாரங்களுடன் காட்டமாக ஜெயலலிதா பதிலளித்து அவர்களைத் திணறடித்தார். சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்
மீது நடந்த விவாதத்தில் தி.மு.க. சட்டமன்றஉறுப்பினர் பொன்முடி பேசினார். 1993ம் ஆண்டு சென்னை கோட்டையில் விடுதலை நாளன்று தேசிய கொடி
ஏற்றி பேசும்போது நீங்கள் (ஜெயலலிதா) கச்சத்தீவை மீட்டெடுப்பேன் என்று பேசினீர்களே
என்று பொன்முடி பேசியபோது முதலமைச்சர் ஜெயலலிதா குறுக்கிட்டு பதிலளித்தார். முதலமைச்சர் ஜெயலலிதா:
இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு தி.மு.க. உறுப்பினர்களுக்கு எந்தவிதமான
அருகதையும் கிடையாது. (ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம்) தி.மு.க. ஆட்சியில்
இருந்தபோதுதான் கருணாநிதி, முதலமைச்சராக இருந்தபோதுதான் கச்சத் தீவு இலங்கைக்கு தாரை
வார்க்கப்பட்டது. (ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம்) 1974-லும்,
1976-லும் அப்போதைய நடுவண் அரசு இந்த ஒப்பந்தங்களைச் செய்துகொண்டபோது, அவர்களுடைய தலைவர்,
அன்றைய முதல்வர் என்ன செய்து கொண்டிருந்தார்? (ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி
ஆரவாரம்) அதைத் தடுப்பதற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா? அதை எதிர்த்து ஏதாவது போராட்டம்
நடத்தினாரா? ஒன்றுமேயில்லையே. கூச்சல் போட்டு உண்மையை மறைக்க முடியாது கச்சத்தீவைத் தாரை வார்த்துவிட்டு, இத்தனை ஆண்டுகள் கழித்து,
1991-ல் நீங்கள் பேசினீர்களா இல்லையா என்றால், நான் பேசினேன், ஒரு மாநில அரசின் அதிகார
வரம்பு எதுவரை உள்ளது என்பதை, உணர்ந்து, அறிந்து பேசினேன். நடுவண் அரசு மூலமாக நான்
அதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் என்று பேசியிருக்கிறேனே தவிர, நான் ஒரு படையைத் திரட்டிக்கொண்டு போய், கச்சத் தீவை மீட்பேன்
என்று பைத்தியக்காரத்தனமாக பேசவில்லை. (ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம்) இன்றைக்கு இவ்வளவு பேசுகின்ற தி.மு.க. உறுப்பினர்கள் இதற்கு
பதில் சொல்ல வேண்டும். அன்றைக்கு கச்சத் தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டபோது
ஏன் பேசாமல் இருந்தார்கள்? (ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம்) அன்றைய
தி.மு.க. முதல்வர் ஏன் மவுனம் சாதித்தார்? ஏன் அதைக் கொடுக்க அனுமதித்தார்? (ஆளுங்கட்சி
உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம்) உச்ச நீதிமன்றம் மூலமாக நடவடிக்கை எடுத்தது நான்.
2008-ம் ஆண்டு நடுவண் அரசை அணுகி, எந்தப் பயனுமில்லை என்று தெரிந்த பிறகு, நான் தனிப்பட்ட
முறையில் அண்ணா தி.மு.க.வின் பொதுச் செயலாளர் என்ற முறையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்தேன். (ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம்) அப்போது இங்கே முதலமைச்சராக
இருந்தவர் கருணாநிதி. (அப்போது தி.மு.க. உறுப்பினர் அன்பழகன் எழுந்து கூச்சல் எழுப்பினார். தி.மு.க. உறுப்பினர்களும் எழுந்து கூச்சலிட்டனர்.) கச்சத்தீவைப் பற்றி இவருக்கு என்ன தெரியும்? (தொடர்ந்து தி.மு.க.வினர்
கூச்சல்) எதிர்க்கட்சியினர் எவ்வளவுத்தான் கூச்சல் போட்டாலும், உண்மைகளை
மறைக்க முடியாது. (ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம்) தி.மு.க.தான் காரணம் கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு தி.மு.க. தான் காரணம்.
அன்றைய முதலமைச்சர் கருணாநிதிதான் காரணம். இன்று மீனவர்கள் படும் அல்லல்களுக்கெல்லாம்,
இன்னல்களுக்கெல்லாம் காரணம் தி.மு.க.தான், தி.மு.க.தான், தி.மு.க.தான். (ஆளுங்கட்சி
உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம்) அதை எத்தனை கூச்சல் போட்டாலும் மறைக்க முடியாது.
2008ம் ஆண்டு நான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபொழுது
அப்போது நடுவண் அரசின் சார்பில் அதற்கு கவுன்டர் அபிடவிட் பைல் செய்யப்படவேண்டும்.
அதைப்போலவே உச்சநீதிமன்றத்திலிருந்து தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தமிழக
அரசும் ஒரு நோட்டீஸ், கவுன்டர் அபிடவிட் அங்கே பைல் செய்யவேண்டும். அந்த நேரத்தில்
கருணாநிதி என்ன சொன்னார் தெரியுமா? நடுவண் அரசு என்ன அபிடவிட் பைல் செய்கின்றது என்பதைப்
பார்த்துவிட்டு அதன் பின்னர் தமிழக அரசின் அபிடவிட் பைல் செய்யலாம் என்றார். (ஆளுங்கட்சி
உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம்) கச்சத் தீவை மீட்கும் லட்சணம் இதுவா? இதுதான் கச்சத் தீவை மீட்கும் லட்சணமா? (ஆளுங்கட்சி உறுப்பினர்கள்
மேஜையை தட்டி ஆரவாரம்) அந்த உணர்வாவது தி.மு.க.வுக்கு இருக்கிறதா? (ஆளுங்கட்சி உறுப்பினர்கள்
மேஜையை தட்டி ஆரவாரம்) அன்றையதினம் நடுவண் அரசு என்னுடைய வழக்கை தூக்கி எறிய வேண்டும்.
கச்சத் தீவை மீட்க முடியாது. ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தங்களை ரத்து செய்ய முடியாது.
அது முடிந்து போன பிரச்சினை என்று உச்ச நீதிமன்றத்தில் கவுன்டர் அபிடவிட் பைல் செய்தது.
அதே ரீதியில்தான் தமிழக அரசும் அன்றையதினம் கவுன்டர் அபிடவிட் பைல் செய்தது என்பதை
இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். (ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி
ஆரவாரம்) இதற்கு மேலும் இதைப் பற்றி தி.மு.க.வினர் பேசுவதற்கு அருகதையில்லை
என்பதை மீண்டும் அறுதியிட்டு உறுதியாக கூறுகிறேன். (ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையை
தட்டி ஆரவாரம்) உண்மையாக கச்சத் தீவை மீட்க வேண்டுமென்ற எண்ணம் தி.மு.க.விற்கு
இல்லை. அவர்களாக நடவடிக்கை எடுக்கவில்லை. 2008ம் ஆண்டு, நான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபொழுது
அப்போது தமிழக அரசு தி.மு.க. தலைமையில் இருந்தது. தமிழக அரசு தன்னை அதே வழக்கில் இம்ப்லீட்
செய்துகொண்டிருக்கலாம் அல்லவா? (ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம்) செய்திருக்க
வேண்டாமா? அந்த வழக்கில் தன்னையும் தமிழக அரசு இணைத்துக்கொண்டு இருக்க வேண்டாமா? (ஆளுங்கட்சி
உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம்) ஏன் செய்யவில்லை. (ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையை
தட்டி ஆரவாரம்) அதன் பிறகு நான் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 2011ம் ஆண்டில்
இந்தச் சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றி அதன் பிறகு ரெவின்யூ டிபார்ட்மென்ட்
மூலமாக தமிழக அரசை இந்த வழக்கில் நான் இணைத்திருக்கிறேன். அந்தக் காரியத்தை தி.மு.க.
ஆட்சியில் இருந்தபோது ஏன் செய்யவில்லை?(ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம்) பொன்முடி (தி.மு.க.)
1974ல் கச்சத்தீவு கொடுத்தபோது அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக்கூட்டி
முடிவு எடுத்தது. நீங்கள் மட்டும் நடுவண் அரசாங்கத்தை
கேட்டு செய்கின்றீர்களா? ஏன் கேட்கிறீர்கள்? முதல்வர் ஜெயலலிதா: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அனைவரும் சம்மதித்து அந்த
முடிவின்படிதான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது என்றால் அதை அவர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்
என்று அர்த்தம். அப்படியானால் நான் ஏன் மீட்கவில்லை என்று என்னைப் பார்த்து ஏன் கேள்வி
கேட்கிறீர்கள். (ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம்) பொன்முடி (தி.மு.க.): தயவு செய்து உங்களைப் பார்த்து நான் ஏன் மீட்கவில்லை என்று கேட்கவில்லை.
ஆனால், 1991-லிருந்து இதுவரை உங்கள் வாதப்படி 6 முறை முதலமைச்சராக இருந்த நீங்கள் அதற்காக
…. எனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை முதல்வர் ஜெயலலிதா: ஆறாவது முறையாக நான் முதலமைச்சராக ஆகியிருப்பது உண்மைதான். முதலமைச்சரான
நாள் முதல் 1991 முதல் இன்று வரை எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து
கச்சத்தீவை மீட்பதற்கு என்னால் முடிந்த நடவடிக்கைகளை மாநில அரசின் அதிகார வரம்பிற்கு
உட்பட்ட வகையில் நான் செய்துகொண்டுதான் இருக்கிறேன். நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டுதான்
இருக்கிறேன். ஆனால் இடைப்பட்ட காலத்தில் ஒரே ஒரு ஆண்டுதான் அண்ணா தி.மு.க.
மத்திய கூட்டணி அரசில் அங்கம் வகித்தது. அந்த நேரத்தில் தமிழகத்தின் சார்பில் நாங்கள்
வைத்த எந்தக் கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்கவில்லை என்பதால்தான் அந்தக் கூட்டணியை
விட்டு வெளியேறினோம். (ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம்) ஆனால், அந்த
ஒரு ஆண்டை தவிர, மற்ற அனைத்து ஆண்டுகளிலும் மத்தியிலே காங்கிரஸ் தலைமையில் கூட்டணி
ஆட்சி ஆனாலும் சரி, பி.ஜே.பி. தலைமையில் கூட்டணி ஆட்சி ஆனாலும் சரி, தி.மு.க. அதிலே
அங்கம் வகித்தது. (ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம்) அருகதை இல்லை அப்போது நீங்கள் உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி இவர்களுடைய
தலைவர் இங்கேயும் ஆட்சியில் இருந்தார், மத்தியிலும் ஆட்சியில் இருந்தார். அப்போது நான்
சொல்வதைத்தான் பிரதமர் கேட்கிறார், என்னுடைய ஆலோசனைப்படிதான் பிரதமரே செயல்படுகிறார்
என்று பெருமையாக மார் தட்டிக்கொண்ட (ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம்)
உங்கள் தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் அப்போது ஏன் மத்திய அரசிற்கு அழுத்தம்
கொடுத்து, கச்சத் தீவை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படி அத்தனை
ஆண்டுகள் தூங்கிவிட்டு, இப்பொழுது திடீரென்று விழித்துக்கொண்டு சுip ஏயn றுiமெடந (ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம்)
மாதிரி சட்டமன்றத்திற்கு வந்து, நீங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று என்னைப்
பார்த்துக் கேட்பதற்கு உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. (ஆளுங்கட்சி உறுப்பினர்கள்
மேஜையை தட்டி ஆரவாரம்) எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதினார் என்று விளக்கம் அளித்தார். அப்போது முதல்வர் எழுந்து ஸ்டாலினுக்கு பதில் அளித்தார். எதிர்க்கட்சித் தலைவர்
ஸ்டாலின் பேசும் போது தமிழக அரசை மத்திய
அரசு கலந்தாலோசிக்கவில்லை எனத் தெரிவித்தார். கச்சத்தீவு காவு கொடுக்கப்பட்டதை தடுக்க
எதையுமே செய்யாமல் மவுனம் சாதித்து விட்டு, கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட பிறகு, பெயரளவிலே
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி கச்சத்தீவு பிரச்சனைக்கு
மூடு விழா நடத்தினார் கருணாநிதி. அந்தத் தீர்மானத்தின் மீது பேசிய கருணாநிதி, ஜூன் மாதம் 27ம் தேதி திடீரென்று அறிவிப்பு
வந்தது. இப்போதும் சொல்கிறேன். இது பற்றி எந்த விதமான சூசகமான தகவலையும் இந்த அரசுக்கு
அறிவிக்கவில்லை. 27-ம் தேதி பத்திரிகையில் பார்த்தவுடன் பதறிப் போய் எல்லாக்
கட்சித் தலைவர்களுக்கும் தந்தி கொடுத்தேன். …” என்று கூறியிருக்கிறார். ஆனால், கருணாநிதியின் தலைமையில் ‘‘டெசோ” அமைப்பின் சார்பில் 15.4.2013
அன்று நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கச்சத்தீவு குறித்த தீர்மானத்தில், 1974ம்
ஆண்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட போது, கழக அரசு முதல் நிலையிலேயே அதனைக் கடுமையாக
எதிர்த்தது. அதையும் மீறி ஒப்பந்தம் கையெழுத்தானபோது, குறைந்த பட்சம் தமிழக மீனவர்களுக்கு
கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையும், மீனவர்களின் வலைகளை அங்கே உலர்த்திக்
கொள்வதற்கான உரிமையும் அந்த ஒப்பந்தத்தின் பிரிவுகளில் சேர்க்கப்பட வேண்டுமென்று கழக
அரசு வலியுறுத்தி அந்த ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டன. …” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எது உண்மை இதில் எது உண்மை என்பதை
எதிர்க்கட்சித் தலைவர் தான் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். 1974-ல் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில், பேசிய கருணாநிதி, கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட
செய்தியை, பத்திரிகைகளில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன்; பதறிப் போனேன்” என்கிறார். ஆனால் 2013-ல், நடைபெற்ற
டெசோ கூட்டத்தில், ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே, இவர் சொல்லித் தான் சில
ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டன என்கிறார்! இவற்றில்
எது உண்மை என்பதை எதிர்க்கட்சித் தலைவர் தான் விளக்க வேண்டும். கருணாநிதி துரோகம் முதல்வர் ஜெயலலிதா: கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டபோது பேசாமல்
இருந்துவிட்டு, அதன் பிறகு கடிதங்கள் எழுதினோம், நாடாளுமன்றத்தில் பேசினோம், அனைத்துக்
கட்சி கூட்டத்தைக் கூட்டினோம், அங்கே இதைப் பேசினார்கள், (ஆளுங்கட்சி உறுப்பினர்கள்
மேஜையை தட்டி ஆரவாரம்) அதைப் பேசினார்கள் என்றால், இதையெல்லாம் நாங்களும் செய்திருக்கிறோம்.
நாங்களும் பல கடிதங்கள் மத்திய அரசுக்கு எழுதியிருக்கிறோம். நாங்களும் பல பேச்சுகளைப்
பேசி இருக்கிறோம்; நாங்களும் பல தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோம். ஒவ்வொரு பிரதமருக்கும்
கடிதங்கள் எழுதியிருக்கிறோம். அதற்கெல்லாம் பலன் ஏற்படவில்லை. எந்தப் பலனும் இல்லை
என்பதால்தான், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன். (ஆளுங்கட்சி உறுப்பினர்கள்
மேஜையை தட்டி ஆரவாரம்) கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டபோது, 29-6-1974 அன்று செய்தியாளர்கள்
அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியிடம், கச்சத் தீவை பிரதமர் இந்திரா காந்தி இலங்கைக்கு
கொடுத்தது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக ஜன சங்கத் தலைவர் வாஜ்பாய்
அறிவித்துள்ளாரே, உங்கள் கருத்து என்ன என்று கேட்டதற்கு, அதுபற்றி நான் கருத்துத் தெரிவிக்க
விரும்பவில்லை என்று பதில் கூறியுள்ளார் கருணாநிதி. (ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையை
தட்டி ஆரவாரம்) வழக்குத் தொடர முடியும் என்றும், வழக்குத் தொடரப்படும் என்றும், தமிழக
மீனவர் பிரச்சினையில் நேரடி தொடர்பில்லாத வாஜ்பாய் அறிவித்த பின்னரும், அதுபற்றி எந்த
அக்கறையும் காட்டாமல் தமிழக மீனவர்களுக்கு துரோகம் இழைத்தவர்தான் கருணாநிதி என்பதை
மீண்டும் கூறுகிறேன். (ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம்) இதைப்பற்றி
விவரமாகத் தெரியாத உறுப்பினர்களுக்காக, புதிய உறுப்பினர்களுக்காக சில விவரங்களை இங்கே
தெரிவிக்க விரும்புகிறேன். நீதிமன்றம்தான் ஒரே வழி ஆர்ப்பாட்டம் நடத்துவது, போராட்டம் நடத்துவது, அனைத்துக் கட்சிக்
கூட்டம் நடத்துவது, பிரதமருக்கு கடிதங்கள் எழுதுவது, இதெல்லாம் ஓரளவுக்குத்தான். அதற்கு
எந்தப் பலனுமில்லை. நானும் இவற்றையெல்லாம் செய்து பார்த்துவிட்டேன். எந்தப் பலனுமில்லை
என்ற பிறகுதான், நீதிமன்றத்திற்குச் செல்வதுதான் ஒரேவழி என்று உச்ச நீதிமன்றத்திற்குச்
சென்றேன். (மேசையைத் தட்டும் ஒலி) ஏனென்றால் இதற்கு ஒரு முன்மாதிரி இருக்கிறது.
1960ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் ஒரு தெளிவான தீர்ப்பைக் கொடுத்திருக்கிறது. அ
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.