Show all

பீகார் தோல்விக்கு, மோகன் பகவத்தும், அமித்ஷாவும்தாம் காரணம்: ஜித்தன்ராம் மாஞ்சி

பீகார் தோல்விக்கு, மோகன் பகவத்தும், அமித்ஷா ஆகிய இருவர்தாம் காரணம் என முன்னாள் முதல்வர் ஜித்தன்ராம் மாஞ்சி குற்றம் சாட்டியுள்ளார்.

பீகார் தேர்தல் தோல்வி குறித்து, பீகார் முன்னாள் முதல்வர் ஜித்தன்ராம் மாஞ்சி கூறுகையில், பாஜக கூட்டணிக்கு ஏற்பட்ட தோல்விக்கு, ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன்பகவத் மற்றும் அமித்ஷா ஆகிய இருவர்தான் காரணம்.

குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத், தலித்துகள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தேர்தலின் போது கூறினார்.

அதேபோன்று, பீகார் தேர்தலில் பாஜக தோற்றால் பாகிஸ்தானில் பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தேர்தல் பிரசாரத்தின் போது கூறியிருந்தார்.

இந்த இருவரின் கருத்துக்களும், தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டதாக மாஞ்சி குற்றம் சாட்டியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.